×

முன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு

பெரம்பூர்: வியாசர்பாடி தாமோதரன் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (30). கூலி வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு எம்கேபி நகர் 19வது தெரு மேம்பாலம் அருகே உள்ள மதுபான கடையில் வெளியே நின்று, சக தொழிலாளர்கள் செந்தில், ஏழுமலை, மணிகண்டனுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, ரஞ்சித்குமாருக்கும், 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ரஞ்சித்குமாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். தகவலறிந்து வந்த எம்கேபி நகர் போலீசார் ரஞ்சித்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஏழுமலை (45), அதே பகுதியை சேர்ந்த செந்தில் (30), கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.மற்றொரு சம்பவம்: ஓட்டேரி சேமத்தம்மன் காலனி 1வது தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (30). பி.பி ரோடு சுடுகாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா (22). கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி ஓட்டேரி போலீசார் ஆகாஷ் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின்பு 10 நாட்களில் ஆகாஷ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில், திவ்யா மற்றும் அவரது கணவர் ஜெயபால் ஆகியோர்  தான் ஆகாஷை போலீசில் காட்டிக் கொடுத்தனர்  என்று கூறி ஆகாஷ் தரப்பை சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திவ்யா வீட்டிற்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் திவ்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் திவ்யாவுக்கு இடது கை சுண்டு விரல் மற்றும் நடுவிரல் துண்டானது. அவரை காப்பாற்ற வந்த அவரது பாட்டி கிளாரா என்பவரையும்  தள்ளிவிட்டு தாக்கியதில் அவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. திவ்யா மற்றும் கிளாரா ஆகிய இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து ஓட்டேரி குற்ற பிரிவு  இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட குணாளன் மற்றும் 3 பேரை தேடி வருகின்றனர்….

The post முன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Ranjith Kumar ,5th Street, Vyasarpadi Damodaran Nagar ,Coolie ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...